கரூர், நவ. 7: கரூர் திருச்சி பைபாஸ் சாலை குன்னனூர் பிரிவு அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள நிழற்குடை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் குன்னனூர் பிரிவுக்கான சாலை வசதி உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கரூர், வெள்ளியணை, சுக்காலியூர், மதுரை பைபாஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு வசதியாக குன்னனூர் பிரிவு அருகே நிழற்குடை அமைத்து தரப்பட்டுள்ளது.