காரைக்கால், நவ. 7: காரைக்காலில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக மகளிர் அணி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சரும், திமுக மாநில அமைப்பாளருமான நாஜிம் வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் வைஜயந்தி ராஜன், துணை அமைப்பாளர்கள் சப்னா மோத்தி, கல்யாணி, உமா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 400 மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.பின்னர், நாஜிம் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்திலும், புதுச்சேரி மாநிலத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் புதுச்சேரி மாநிலத்தின் திமுக மகளிரணி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி தற்போது ஆயுஷ்மான் என்ற மத்திய அரசின் சுகாதார காப்பீடு திட்டம் மிகவும் பயன்தரக்கூடிய திட்டமாக நான் கருதுகிறேன். அந்த திட்டத்தின் மூலம் உண்மையான ஏழைகளுக்கு பணம் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்கிறோம். இத்திட்டத்தின் அடிப்படையில் இப்போது யார் தகுதியானவர் என்ற பட்டியல் ஆரம்ப சுகாதார நிலையம், நகர சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.