திருபுவனை, நவ. 6: மதகடிப்பட்டு சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். திருபுவனை அடுத்த மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதையொட்டி அங்கு அதிகளவில் காய்கறி கடைகள், பழக்கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். இந்த சந்தையில் தடை ெசய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்கள் சென்றது.