கார் மோதி தொழிலாளி பலி

அம்பை, நவ.6:  அம்பாசமுத்திரம், முடப்பாலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன்(55). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவரும் வேலாயுதம்நகரைச் சேர்ந்த பொன்மாரி என்பவரும் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே கணேசன் என்பவர் ஓட்டி வந்த கார் முருகன், பொன்மாரி ஆகியோர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் முருகன் உயிரிழந்தார். பொன்மாரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்பை  இன்ஸ்பெக்டர் (பொ) ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து கணேசனிடம் விசாரித்து வருகிறார்.

Related Stories: