நெல்லையில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நெல்லை, மே 22: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் தலைமையில் நாளை (23ம் தேதி) பாளையங்கோட்டை மகராஜநகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து நடக்கிறது. இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் தவறாமல் பங்கேற்று கருத்துக்களை வழங்க வேண்டும். இவ்வாறு ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

The post நெல்லையில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: