செய்யாறு, நவ.6: வெங்காயத்தை மதிப்பு கூட்டு பொருளாக அறிவிக்கக்கோரி செய்யாறில் விவசாயிகள் வெங்காய மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு பிடிஓ அலுவலக அரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அலுவலகம் வெளியே விவசாயிகள் வெங்காயத்தை மாலையாக அணிந்து, திருவள்ளுவர் படத்தை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.