தண்டராம்பட்டு, நவ.6: தண்டராம்பட்டு அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 40 சவரன் மற்றும் ₹2 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தசரதன்(54), அரசு பஸ் டிரைவர். இவரது தாயார் ஜெயலட்சுமி(75). இவர் வீட்டின் அருகே பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் தசரதன் கடந்த 3ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்தார். மூதாட்டி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். வேலை முடிந்ததும் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் தசரதன் வீட்டிற்கு வந்தார்.