வேட்டவலம், நவ.6: வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தனிப்பிரிவு காவலர் கோட்டீஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று வேட்டவலம் அடுத்த நாரையூர் கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.