திருவில்லிபுத்தூர் அருகே பாலத்தின் அடியில் முதியவர் பிணம்

திருவில்லிபுத்தூர், நவ. 5:திருவில்லிபுத்தூர் அருகே பாலத்தின் அடியில் தண்ணீருக்குள் முதியவர் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவில்லிபுத்தூர்  அருகே படிக்காசுவைத்தான்பட்டி மின்வாரியம் அருகே உள்ள பாலத்தின் அடியில் தண்ணீருக்குள் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக  கிடப்பதாக வன்னியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி ஜெயராஜ் தலைமையில்  தீயணைப்பு துறை விரைந்து சென்று பாலத்தின் அடியில் தண்ணீருக்குள்  இருந்த முதியவரின் உடலை கயிறு கட்டி வெளியே மீட்டுக் கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர்  யார், எந்த ஊர், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா,  உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா என பல்வேறு கோணங்களில் வன்னியம்பட்டி  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: