வில்லியனூர், நவ. 5: புதுச்சேரிக்கு அடுத்தபடியாக துணை நகரமாக வில்லியனூர் விளங்கி வருகிறது. இந்நிலையில் வில்லியனூர் பைபாஸ் சாலை, சங்கராபரணி ஆற்றங்கரை, சாலையோரங்களில் திருமண மண்டபங்களின் பிளாஸ்டிக் பைகள், வாழை இலை மற்றும் மரம், கோழி இறைச்சியின் கழிவுகள், இறக்கைகள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. இதுதொடர்பாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் சந்திரசேகரன், ைபபாஸ் சாலையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என கொம்யூன் பஞ்சாயத்துக்கு ேகாரிக்கை விடுத்திருந்தார். அதன்படி நேற்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் தலைமையில் பைபாஸ் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் 46 டன் குப்பைகள் அதிரடியாக அகற்றப்பட்டது.