பெரம்பலூர்,நவ.5:பெரம்ப லூரில் கடந்த ஓராண்டில் மட்டும் 7ஆயிரம் அஞ்சலக சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட் டுள்ளதாக அஞ்சல் ஆய்வாளர் விஜய் பாலாஜி தெரிவித்தார். மக்களிடையே சிக்கன சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில்,சிறு சேமிப்பை ஊக்குவிப்பதற்காக அக்.30ம்தேதிமுதல் உலக சிக்கன தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதனடிப்படையில் பெரம்பலூரில் அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. குன்னம் சட்ட மன்றத் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் அஞ்சலக சேமிப்பு மற்றும் இந்திய அஞ்சலக வங்கி புதிய கணக்குகள் தொட ங்கும் களப்பணியை தொடங்கி வைத்து மேற்க ண்ட திட்டங்களில் இணைந்தார்.