நெல்லை, நவ. 5: முன்னோர்கள் கோயிலுக்கு தானமாக வழங்கிய நிலங்களை தனியாருக்கு விற்பனை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து முன்னணியினர் கலெக்டரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குற்றாலநாதன் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனு விவரம்: நெல்லை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பழமையான ஆலயங்கள் உள்ளன. ஆலய பராமரிப்பு, பூஜைகள் போன்றவற்றிற்காக முன்னோர்களால் ஆலயத்தில் இருந்து சுவாமி பெயரில் ஆலயங்களின் நிலங்கள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களாகும். அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் அல்ல.