மதுரை, நவ. 5: மதுரை அவனியாபுரத்தில் மாயமான 2 இளம்பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை அவனியாபுரம் பகுதி சிந்தாமணியில் உள்ள, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் பிரேமா (21). இவர், அப்பகுதியில் உள்ள ஒரு கேபிள் டிவி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த அக்.31ம் தேதி பணிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் காணவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.