பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு தோட்டத்தொழிலாளர்கள் மகிழ்ச்சி

பந்தலூர், நவ. 5 : பந்தலூர், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை  அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக கால நிலை மாற்றம் ஏற்பட்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ உள்ளிட்ட தேயிலைத்தோட்டங்களில் நாள் ஒன்றுக்கு ஒரு பெண் தொழிலாளி 25 கிலோ பசுந்தேயிலை பறிக்கவேண்டும், அதற்கு மேல் பறிப்பவர்களுக்கு கிலோ ஒன்றுக்கு கூடுதலாக இன்சன்டீவ் வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் ஆர்வமுடன் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: