கோவை, நவ.1:கோவை - மேட்டுப்பாளையம் இடையே புதிய நவீன வசதிகள் பெட்டிகள் கொண்ட மெமோ ரயில் சேவை நேற்று துவங்கப்பட்டது.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக டீசல் இன்ஜிசின் மூலம் தினசரி பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் பாசஞ்சர் ரயில் சேவை கடந்த 30ம் தேதியுடன் நிறைவுற்றது. நேற்று முதல் கோவை - மேட்டுப்பாளையம் இடையே மெமோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.சி.எப் ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன ரயிலில் இரண்டு பக்கமும் இன்ஜின் உள்ளது.