தண்ைடயார்பேட்டை: பாரிமுனையில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, 8 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட், 64 கிராம் தங்க கட்டியை கடத்தி வந்தவர் பிடிபட்டார். சென்னை பாரிமுனையில் கடந்த 2 நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் வடக்கு கடற்கரை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ஒருவரை, போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது பைக்கை சோதனை செய்தபோது, அதில் ₹8 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளும், 64 கிராம் தங்க கட்டியும் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.