திருத்துறைப்பூண்டி, நவ.1: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் மற்றும் உலக சிக்கன தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் திருமாறன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ்திட்ட அலுவலர் தனபாலன் வரவேற்றார்.உலக சிக்கன தினம் குறித்தும், சிக்கனமாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் திருத்துறைப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சின்னதுரை பேசினார். தேசிய ஒற்றுமை தினம் சர்தார் வல்லபாய்படேலின் வாழ்க்கை வரலாறு சமஸ்தானங்களை இணைப்பதில் அவருடைய முயற்சி. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய விதம் உள்ளிட்டவை குறித்து பாமணி அரசு மேல்நிலைப்பள்ளிஎன்எஸ்எஸ்திட்ட அலுவலர் முருகேசன் பேசினார்.