மது பாரில் கொத்தனாருக்கு பீர்பாட்டில் குத்து

வில்லியனூர், நவ. 1: வில்லியனூர் அருகே அரியூர் பாரதி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (34), கொத்தனார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (21) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவ ஊர்வலத்தின் போது தகராறு  ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி அரியூர் பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் ரவிக்குமார் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற ஆனந்த் திடீரென பீர்பாட்டிலை உடைத்து அவரை  குத்தியுள்ளார். அங்கிருந்தவர்கள் ரவிக்குமாரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இது குறித்து, வில்லியனூர் காவல் நிலையத்தில் ரவிக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: