முசிறி அருகே மழைக்கு குடிசை வீடு சேதம்

முசிறி, அக்.31: முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் மழைக்கு குடிசை வீடு சேதமடைந்தது. முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமதுகாசிம்(60). இவர் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று தொடர்ந்து பெய்த மழைக்கு முகமதுகாசிம்மின் குடிசை வீட்டின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தேவராஜன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், மண்டல துணை தாசில்தார் தங்கராசு ஆகியோர் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு நிவாரண உதவி வழங்கிட தாசில்தார் ஆறுமுகத்திற்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து தாசில்தார் பாதிக்கப்பட்ட முகமதுகாசிம்மிற்கு வேட்டி, சேலை, மண்ணெண்ணை, அரிசி மற்றும் ரூ.4,100 வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories: