சிவகாசி, அக். 31:சிவகாசியில் வாறுகாலில் திறந்துவிடப்படும் தனியார் லாட்ஜ் செப்டிக் டேங் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க சுகாதார திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தூய்மை பாரதம் திட்டத்தில் சிவகாசி நகராட்சியில் குப்பை கழிவுகளை சாலையில் கொட்ட நகராட்சி நிர்வாகம் தடை விதித்து நடமாடும் வாகனங்கள் மூலம் குப்பைகழிவுகளை சேகரித்து உரம் தயாரித்து வருகிறது. நகராட்சியில் சுகாதார பணிகளை மேம்படுத்த தற்காலிக சுகாதார பணியாளர்கள் 250 பேர் பணி நியமிக்கப்பட உள்ளனர். சுகாதார பணிகளை தினமும் கண்காணிக்க மாவட்ட நிர்வாகமும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான லாட்ஜ் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. உணவு விடுதி, பார் வசதியும் உள்ளது. இதனால் தினமும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.