சாத்தூர், அக். 31:சாத்தூரில் 112வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் அன்னதானம் வழங்கினார். சாத்தூரில் முத்துராமலிங்கதேவர் 112வது ஜெயந்தி மற்றும் 57வது குருபூஜையை முன்னிட்டு சமுதாயதலைவர் முருகேசன் தலைமையில் இளைஞர்கள் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். திமுக சார்பில் நகர செயலாளர் குருசாமி, காங்கிரஸ் நகர செயலாளர் கருப்பசாமி, திமக நகர செயலாளர் ஐயப்பன் ஆகியோர் சாத்தூரில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அண்ணாநகர், முக்குராந்தல் பகுதிகளில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். உடன் நகரச் செயலாளர் வாசன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், மணிகண்டன், வேலாயுதம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.