பெரியகுளத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

பெரியகுளம், அக்.31: பெரியகுளத்தில் குரு தட்சிணாமுர்த்தி சேவா சங்கம் சார்பில் கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் சாதனையாளருக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். கைலாசநாதர் அன்பர் பணி செய்யும் திருப்பணிக்குழு தலைவர் ஜெயபிரதீப் முன்னிலை வகித்தார். தேனி திண்ணை பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி வாழ்த்தி பேசினார். பள்ளி துணை ஆய்வாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். சங்க கௌரவ ஆலோசகர் சரவணன், தலைவர் பாண்டி, செயலாளர் கார்த்தி, பொருளாளர் முரளீதரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: