மாநில போட்டிக்கு மேலூர் அரசுப்பள்ளி மாணவர் தேர்வு

மேலூர், அக்.31: மாநில அளவிலான உயரம் தாண்டும் போட்டிக்கு மேலூர் அரசுப்பள்ளி மாணவர் தேர்வு பெற்றார். மதுரை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பாரதியார் தின விளையாட்டு போட்டியாக மதுரையில் நடத்தப்

பட்டது. இதில் மேலூர் அரசு இருபாலர் பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் முகமது ரபியுல் அஸ்மான் உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். இதனை தொடர்ந்து இம்மாணவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். வெற்றி பெற்று திரும்பிய மாணவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன், மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மீனாவதி, நேர்முக உதவியாளர் துரைப்பாண்டி, பள்ளி துணை ஆய்வாளர் வெங்கட்ராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ராவணன், உடற்கல்வி இயக்குநர் மகேந்திர சார்லஸ் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.

Related Stories: