டாக்டர்களின் ேகாரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் பழநியில் பிரேமலதா பேட்டி

பழநி, அக். 31: அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பழநியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் சுவாமி தரிசனம் செய்ய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று அதிகாலையில் வந்தார். விஸ்ரூப தரிசன பூஜையில் கலந்து கொண்ட அவர் பின், வின்ச் மூலம் மலையடிவாரத்துக்கு வந்தார். அங்கு நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘கந்தசஷ்டியை முன்னிட்டு விரதமிருந்து அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறேன். அரசு டாக்டர்களின் வலியுறுத்தும் கோரிக்கைகளில் நியாயமானவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேச உள்ளேன்’ என்றார்.

Related Stories: