புதுச்சேரி, அக். 31: புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் அரியாங்குப்பத்தில் உட்பட்ட ஸ்ரீனிவாசா அப்பார்ட்மெண்ட், அம்பேத்கர் நகர், சண்முகா நகர், பிசிபி நகர் ஆகிய இடங்களில் டெங்கு கொசு உற்பத்தியை கண்டறிந்து அழிக்கும் பணி நடந்தது. அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஜமுனா வரவேற்றார். சுகாதார இணை இயக்குனர்கள் ரகுநாதன், முருகன், தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட அதிகாரி சுந்தர்ராஜ், மலேரியா உதவி இயக்குனர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயமூர்த்தி எம்எல்ஏ தலைமை தாங்கி, டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு களஆய்வு மேற்கொண்டார்.