புதுச்சேரி, அக். 31: மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் கனமழையால் சேதமடைந்த சாலைகளை பிப்டிக் தலைவர் சிவா எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது மழைநீரை சேமிப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் மழைநீர் தொழிற்சாலைகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுவதாகவும், குறிப்பாக 28வது குறுக்குச் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் சிரப்படுவதாகவும், சேம்பர் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகிகள் புகார் தெரிவித்திருந்தனர்.