திண்டுக்கல், அக். 27: திண்டுக்கல் மாவட்டத்தில், சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறுகிய காலம் தங்கி செல்ல வசதியாகவும், பாதுகாப்புடன் தங்குவதற்காக (ஒன் ஸ்டாப் சென்டர்) சகி என்ற குறுகிய கால தங்கும் இல்லம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இல்லத்தில் அரசு அனுமதித்துள்ள பதவியில் செக்யூரிட்டி கார்டு, டிரைவர் பணிக்கு தொகுப்பூதியத்தில் ஒரு பணியிடத்திற்கு பணியாளர் நியமனம் செய்யப்பட உள்ளது. மாத சம்பளம் ரூ.10,000 ஆகும். இந்த பணிக்கு 8ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.