கிருஷ்ணகிரி, அக்.27: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி புத்தாடைகைள் அணிந்து, கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இன்று நடைபெறும் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், சூளகிரி, வேப்பனஹள்ளி, ராயக்கோட்டை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் புது துணி வாங்கவும், பலகாரம் செய்ய தேவையான பொருட்கள் வாங்கவும், நோன்பு கயிறு, பூஜை சாமான்கள் வாங்கவும் கூட்டம் அலைமோதியது.