புதுச்சேரி, அக். 27: புதுவையில் கிராமப்புறத்தை சேர்ந்த 3 ரவுடிகளை குண்டாசில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுவையில் ரவுடிகளை ஒடுக்குவதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். காமராஜர் நகர் இடைத்தேர்தலையொட்டி 25க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஊரில் நுழைய தடைவிதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. 10 ரவுடிகள் ஊரில் நுழையவும் சப்-கலெக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதனிடையே புதுச்சேரியைச் சேர்ந்த 3 ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருபுவனை அருள்பிரகாசம் (28), சுகு என்ற சுகுமாறன் (30) ஆகியோரை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் அருண் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து போலீசார் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுச்சேரி காமராஜர் சாலையில் ஒரு தியேட்டரில் புதுப்படம் வெளியாகி உள்ள நிலையில் பிளாக்கில் டிக்கெட் விற்ற ரெட்டியார்பாளையம் சுதாகரை (30) போலீசார் கைது செய்தனர்.