மஞ்சூர், அக்.27: தரமான பசுந்தேயிலை மட்டுமே விநியோகம் செய்யவேண்டும் என உறுப்பினர்களுக்கு தொழிற்சாலை நிர்வாக தரப்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது. குந்தாபகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரித்துள்ளதுடன் பசுந்தேயிலைவரத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு கடந்த சில தினங்களாக தினசரி 50ஆயிரம் முதல் 50ஆயிரம் கிலோவரை பசுந்தேயிலை வரத்து காணப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் தேயிலைதூள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.