அவிநாசி,அக்.25:அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி பகுதியில் ஒன்றிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் இருந்த குடியிருப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி பகுதியில் அவிநாசி வட்டாரவளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சாந்தி லட்சுமி தலைமையில், மருத்துவ அலுவலர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் செல்வன் மற்றும் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் குழுவினர் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது பழங்கரை ஊராட்சி கமிட்டியார் காலனி பகுதியில் வீடு, வீடாகச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.