ஈரோட்டில் இன்று குறைகேட்பு கூட்டம்

ஈரோடு, அக். 25: ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்பு கூட்டம் இன்று (25ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடக்கிறது.கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்குகிறார். காலை 11 மணி முதல் 11.30 வரை விவசாயிகள் மனு அளிக்கலாம். அதன்பின், விவசாயிகள் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: