மதுரை, அக். 25: வண்டியூர் மாரியம்மன் கோயில் என பெயர் பலகையை மாற்றம் செய்வது குறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, வண்டியூரைச் சேர்ந்த துரைப்பாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வண்டியூர் 400 ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான கிராமமாகும். தற்போது மதுரை மாநகராட்சியில் உள்ளது. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், இங்கு நடக்கும் தெப்பத் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. பல வரலாற்று ஆவணங்கள் மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் என உள்ளது. கடந்த 1890ல் எடுக்கப்பட்ட போட்டோவில் கூட வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்குளம் ேதாண்டப்பட்டபோது எடுக்கப்பட்ட முக்குறுணி விநாயகர் சிலை தற்போது மீனாட்சியம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. அதில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் தோண்டும் போது கிடைத்தது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.