மாணவருக்கு பாராட்டு விழா

காரைக்குடி, அக். 24: அகில இந்திய தரவரிசைக்கான விரைவு செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு மாவட்ட சதுரங்ககழகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.திருவாரூரில் அகில இந்திய தரவரிசைக்கான விரைவு சதுரங்க போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 218 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி பள்ளி மாணவர் பிரனேஷ் முதல் பரிசு பெற்று பரிசு கோப்பை மற்றும் ரெக்க பரிசு பெற்றார்.வெற்றி பெற்ற மாணவருக்கு மாவட்ட சதுரங்ககழகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவிற்கு மாவட்ட சதுரககழக துணைதலைவர் சேவுமுத்துக்குமார் தலைமை வகித்தார்.செயலாளர் கண்ணன், பொருளாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். கூடுதல் செயலாளர் முனைவர் பிரகாஷ் மணிமாறன், இணைச்செயலாளர் ராமு, செயற்குழு உறுப்பினர்கள் செயம்கொண்டான், கணபதிராஜா, ரோட்டரி ஹெரிடேஜ் முன்னாள் தலைவர் நாச்சியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: