திருப்பூர், அக். 24: மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஜனவரி 8ம் தேதி நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் பி.என். ரோடு ஏஐடியுசி சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெகனாதன் தலைமை வகித்தார். சசிகுமார், சிஐடியு மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், எல்.பி.எப். ஜீவாசிதம்பரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.