தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ஊட்டி,  அக்.24: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம்  நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 25ம் தேதி நடக்கிறது.நீலகிரி  மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்  மையம் நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 25ம் தேதி  நடக்கிறது. இதில், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேைல  வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம். இம்முகாமில் 10க்கும்  மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும்  நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளனர். தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில்  தேர்வு செய்யப்படுவதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து  செய்யப்படமாட்டாது. மேலும் எதிர் நோக்கப்படும் டிஎன்பிஎஸ்சி, கிரேட் 2  தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள தங்கள் பெயரை பதிவு  செய்துக் கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை  விண்ணப்பம் பெற்று பயன் அடையலாம். இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்  முற்றிலும் இலவசம். வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துக் கொண்டு  பயன் அடையலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,  ஊட்டி. தொலைபேசி எண் 0423-2444004 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்துக்  கொள்ளலாம்.

Related Stories: