திருவண்ணாமலை, அக்.24: திருவண்ணாமலை அடுத்த மழுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(43). இவர் திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது டீக்கடையில் நேற்றுமுன்தினம் திருவண்ணாமலை வஊசி நகரை சேர்ந்த பர்வீன்(23), இவரது நண்பர்கள் சூர்யா நகரை சேர்ந்த நாகராஜ்(34), பேகோபுரம் 4வது தெருவை சேர்ந்த விக்னேஷ்(25), ராம்ஜிநகரை சேர்ந்த சிகாமணி(20) ஆகிய 4 பேரும் மது அருந்தி உள்ளனர். இதை செல்வக்குமார் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.