பாபநாசம், அக். 23: மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாபநாசம் அருகே மெலட்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. 1972ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, கண் மருத்துவம், பல் மருத்துவம், காசநோய் பிரிவு, ஆய்வகம், எக்ஸ்ரே இயங்கி வருகிறது.இதில் 5 டாக்டர்கள், 40 செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் 3 கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களின் மேற்கூரை பெயர்ந்து விழுகிறது. மேலும் கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.