தர்மபுரி, அக்.23: திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், மாவட்டம் முழுவதும் உள்ள பிடிஓ அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ருத்ரய்யன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் பேசுகையில், தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள சூழ்நிலையில், மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தபோதிலும் உயர் அதிகாரிகள் திட்ட பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.