புதுச்சேரி, அக். 23: மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்து புதுவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கு வங்கி அதிகாரிகள் மட்டுமின்றி ஊழியர்கள் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து கடந்த மாதம் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 22ம் தேதி வங்கிகள் இணைப்பு அறிவிப்பை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.