திருப்பூர், அக். 17: திருப்பூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நாளை (18ம் தேதி) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டமான ‘அம்மா திட்டம்” ஆறாம் சுற்று முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கடந்த 24.08.2018 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (18ம் தேதி) திருப்பூர் வடக்கு பொங்குபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், திருப்பூர் தெற்கு நல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், அவிநாசி போத்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், ஊத்துக்குளி வேலம்பாளையம் இ-சேவை மையத்திலும், பல்லடம் பூமலூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், தாராபுரம் கண்ணாங்கோவில் கிராம நிர்வாக அலுவலகத்திலும், காங்கயம் முத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், உடுமலைபேட்டை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் மடத்துக்குளம் கொமரலிங்கம் மேற்கு சமுதாய நலக்கூடத்திலும் ஆக 9 இடங்களில் முகாம் நடக்க உள்ளது.