நெல்லை, அக். 17: நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அஇசமக தலைவர் சரத்குமார் இன்று (17ம் தேதி) முதல் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4 மணிக்கு நாங்குநேரி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்கண்ணன் குடியிருப்பு, கண்டிகைபேரி, இளையநயினார்குளம், ஏமன்குளம், மன்னார்புரம், இட்டமொழி, காரியாண்டி, செண்பகராமநல்லூர், மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.