புதுச்சேரி, அக். 17: மத்திய பாஜ அரசின் மோசமான பொருளாதார கொள்கை, நாட்டில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி, மகளை வதைக்கும் மோடி அரசை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் சலீம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரதேச செயலாளர் ராஜாங்கம், பெருமாள், முருகன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், நாரா.கலைநாதன், ஏஐடியுசி அபிஷேகம், சேதுசெல்வம், கீதநாதன், லெனினிஸ்ட் சார்பில் மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.