சாத்தூர், அக். 16: சாத்தூர் ரயில்நிலையத்தில் இருசக்கர வாகன காப்பகம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தீப்பெட்டி ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமாக பணிபுரிகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சாத்தூருக்கு ரயிலில் வந்து இறங்குகின்றனர். இதேபோல, சிவகாசிக்கு வரும் தொழிலாளர்களும், தொழிலதிபர்களும் சாத்தூர் ரயில்நிலையம் வந்து பின்னர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், சாத்தூர் ரயில் நிலையத்தின் பயணிகளின் போக்குவரத்தும், வருவாயும் அதிகரித்துள்ளது. இந்த ரயில்நிலையம் வழியாக 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. பஸ் கட்டணம் உயர்ந்த நிலையில், வெளியூர் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரயிலில்தான் சென்று வருகின்றனர். இதனால், ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.