திருப்பூர், அக். 16: அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி திருப்பூரில் பள்ளிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 89வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல பள்ளிகளில் கவிதை, கட்டூரை, பேச்சு போட்டி ஆகியவை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் திருப்பூர் பகுதிகளில் உள்ள பொதுநல அமைப்புகளின் சார்பிலும், அரசியல் கட்சினர்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.