பிஏபி வாய்க்காலில் மூழ்கி பலியான மற்றொருவரின் சடலமும் மீட்பு

உடுமலை, அக். 16:உடுமலை அருகே உள்ள சனுப்பட்டி வல்லகொண்டா புரத்தை சேர்ந்தவர்கள் ஜெயப்பிரகாஷ் (26), சந்திரன்(27), கார்த்திக்(22). இவர்கள் கடந்த 13ம் தேதி சின்னபாப்பனூத்து கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மூவரும் வந்தனர். பின்னர் அங்குள்ள பிஏபி வாய்க்காலில் குளித்தனர். அப்போது ஜெயப்பிரகாசும், சந்திரனும் நீரில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

இதில் ஜெயப்பிரகாசின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், சந்திரனின் சடலத்தை தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று பூசாரிபட்டி அருகே வாய்க்காலில் கரைஒதுங்கிய சந்திரனின் சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தளி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: