உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

மதுரை, அக். 16: மதுரை புறநகர் மாவட்ட பாஜ கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி, மேலூர், மதுரை கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அந்தந்த தொகுதி தலைவர்கள் தலைமை வகித்தனர். மாநிலத்தலைவர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் சுசீந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் மூவேந்திரன், முத்துராமன், கோவிந்தமூர்த்தி, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசினர். இந்த கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினரின் செயல்பாடு, போட்டியிடுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories: