கொடைக்கானல், அக். 16: விலங்குகள்- மனித மோதலை தடுக்காத வனத்துறையை கண்டித்து கொடைக்கானலில் விவசாயிகள் சுவரொட்டி ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொடைக்கானல் மலைப்பகுதியில் வனவிலங்குகளால் மனித உயிர்களுக்கு தொடர்நது ஆபத்து உள்ளது. குறிப்பாக யானை, காட்டுமாடுகளால் மனித பலிகள் தொடர்கதையாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுமாடு தாக்கியதில் கானல்காடு கிராமத்தில் ஊர் தலைவர் ராஜாகிளி பலியானார். ஆனால் வனவிலங்குகள், மனித மோதலை தடுக்க வனத்துறை இதுவரை நிரந்தர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் வனத்துறையை கண்டித்து தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கம் சார்பில் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.