கொடைக்கானல், அக். 16: கோவாவில் இந்தியா, இலங்கை நாடுகளின் பள்ளி மாணவர்களுக்கிடையே கராத்தே போட்டி கடந்த அக்.12, 13ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.சோட்டோ கான், சிட்டோ ரியா, கொஜி ரியோ உள்ளிட்ட முறைகளில் போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் பங்கேற்ற கொடைக்கானல் பள்ளிகளை சேர்ந்த நியுசன், இன்பரசன், சாமுவேல் தங்கமும் மற்றும் வசந்தரா லிங்கம்,
பிரஜின், சாய் ஆதன், கிரன் ஆகாஷ், கிறிஸ்டோபர் ஆகியோர் வெள்ளி- வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.