நத்தத்தில் பட்டாசு தயாரித்தவர் கைது

நத்தம், அக். 16: நத்தம் அருகே செந்துறை - சிலுவன் குறையூரை சேர்ந்தவர் முருகேசன் (40). இவர் அரசு அனுமதியின்றி தனது காட்டு பகுதியில் மறைவான இடம் அமைத்து பட்டாசு தயாரித்துள்ளார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து வெடிபொருட்கள், கரிமருந்து, திரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: